07th September 2022 15:45:56 Hours
இராணுவத்தில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக சேவையாற்றி ஓய்வு பெற்றுச்செல்லும் இலங்கை பீரங்கி படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சமன் லியனகே அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு பனாகொடவில் உள்ள அப்படையணின் தலைமையகத்தில் வியாழன் (1) இடம்பெற்றது.
உயிர்நீத்த போர்வீரர்களின் நினைவுத்தூபிக்கு மலர்வளையம் அணிவித்து ஆரம்பமாகிய அன்றைய நிகழ்வினையடுத்து அன்றைய பிரதம அதிதியான சிரேஷ்ட அதிகாரிக்கு நுழைவாயிலில் பாதுகாப்பு காவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் இராணுவ சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்பட்டது.
அதிகாரி, அதிகாரவணையற்ற அதிகாரிகள்/சார்ஜென்ட்களின் உணவகத்தில் அனைத்து படையினருக்குமான சிற்றுண்டியின் போது, ஓய்வுபெறும் சிரேஷ்ட இருந்த அனைத்து படையினருடனும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் தனது பணிக்காலம் முழுவதும் அவருக்கு அளித்த ஆதரவிற்காக அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
பிரியாவிடை சம்பிரதாயங்கள் அதிகாரவணையற்ற அதிகாரிகள் உணவகத்தில் அன்றைய தினம் மாலை (1) இடம்பெற்ற முறையான இரவு விருந்துபசாரத்துடன் நிறைவடைந்தன.