06th August 2022 21:00:48 Hours
கஜபா படையணியின் புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியாக இருந்து ஓய்வுபெறவுள்ள இலங்கை இராணுவ தொண்டர் படையணித் தலைமையகத்தின் முன்னாள் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் ஷேன் குணவர்தனவை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (01) சாலியபுர கஜபா படையணி மையத்தில் நடைபெற்றது. கஜபா படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கலந்து கொண்டதுடன், அதே படையணி சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த வைபவத்தின் ஆரம்பமாக, மேஜர் ஜெனரல் ஷென் குணவர்தன அவர்கள் கஜபா படையணி ஸ்தாபகரான மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், படையணியின் படையினரால் பாரம்பரிய இராணுவ பாதுகாவலர் அறிக்ககையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிக்கு படையணி படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அன்றைய பிரியாவிடை இராப்போசன விருந்து நிகழ்ச்சிக்கு ஒரு சிறப்பம்சத்தை சேர்த்தது.
இராணுவத் தளபதியும் கஜபா படையணி படைத் தளபதியும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி படைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வண்ணமயமான சம்பிரதாய நிகழ்வில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், படையணி பேரவை உறுப்பினர்கள், நிலையத் தளபதி, பிரதித் நிலையத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படையணி தலைமையகத்தின் அனைத்து படையினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.