04th August 2021 15:57:26 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியாகவும் வழங்கல் கட்டளை பிரிவின் தளபதியாகவும் சேவையாற்றி ஓய்வு பெற்றுச்செல்லும் மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால் அவர்களுக்கான கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (31) பொல்ஹேன்கொடையிலுள்ள இராணுவ பொலிஸ் படையின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் நுழைவாயிலில் ஓய்வுபெறும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் நுழைவாயில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதோடு, இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் தலைமையகத்தின் சகல அதிகாரிகளினதும் பங்கேற்புடன் தளபதிக்கு கௌரவம் செலுத்தப்பட்டது.
அதனையடுத்து இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படையினருக்கான உரையொன்றினை நிகழ்த்திய மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால் தனது பதவிக் காலத்தில் தனக்கு உதவிகளை வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவித்தார்.
நிகழ்வின் நிறைவம்சமாக தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.