07th October 2021 06:00:04 Hours
ஆமற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவு மற்றும் 142, 143 பிரிகேட் சிப்பாய்கள் இணைந்து ஸ்ரீ ஜயவர்தனபு வைத்தியசாலை, டி சொய்சா வைத்தியசாலை, குருணாகல் போதனா வைத்தியசாலை மற்றும் குளியாப்பிட்டிய வைத்தியசாலை ஆகியவற்றுக்கு அவசியமான ஒட்டிசிசன் அளவீட்டு கருவிகளை பகிர்ந்தளித்தனர்.
மேற்படி வைத்தியசாலைகளில் அவசர நிலைமைகள் ஏற்படும் சந்தர்பங்களில் பயன்படுத்துவதற்காகவே ஒட்சிசன் அளவீட்டு கருவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
பல்வேறு நன்கொடையாளர்களிடமிருந்து பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட வைத்திய உபகரணங்களே இவ்வாறு விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் வழிகாட்டலின் கீழ் 14 வது படைப்பிரிவின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது.