11th January 2024 20:13:13 Hours
14 வது இலங்கைப் பாதுகாப்பு குழுவின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டி.பீ.ஐ.டி களுஅக்கல ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஐஜி மற்றும் பிரதி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூடிஎஸ்எஸ் பெர்னாண்டோ யூஎஸ்பீ ஆகியோர் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் சேவை விநியோக நிர்வாக தலைவர் திரு. ராஜேஷ் சாதா அவர்களை மரியாதை நிமித்தமான 29 டிசம்பர் 2023 அன்று சந்தித்தனர்.
உத்தியோகபூர்வ கலந்துரையாடலின் போது, இரு தரப்பினரும் குழுவின் வழங்கல் திறன்கள், படையினர்களின் பங்களிப்பு மற்றும் எதிர்கால குழுக்களுக்கு மேலும் வலுவை சேர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விடயங்களை கலந்துரையாடினர்.
கலந்துரையாடலின் முடிவில் இரு தரப்பினருக்கும் பாராட்டுச் சின்னமாக நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.