04th May 2023 18:49:18 Hours
முதலாம் படையின் 53 வது காலாட் படைப்பிரிவின் எயார் மொபைல் பிரிகேட் படையினர் ஏப்ரல் 29 தொடக்கம் மே 01 வரை 29 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடினர்.
எயார் மொபைல் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஏஜிஎஸ்எம் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 29) பிரிகேட் தலைமையகத்தின் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், அவர் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் 29 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
பின்னர், பிரிகேட் தளபதி அனைத்து நிலையினருக்கும் உரையாற்றியதுடன், கோப்ரல் உணவகத்தில் அனைத்து நிலையினருடனான மதிய உணவிலும் கலந்து கொண்டார்.
ஆன்மிகப் பிரிவுகளை இணைத்து, 'தர்ம பிரசங்கம்' மற்றும் அன்னதானம் வழங்கியதுடன், மறுநாள் வீரமரணம் அடைந்த போர்வீரர்களுக்கும் சேவையில் உள்ள அனைத்து படையினர்களுக்கும் ஆசீர்வாதங்களும் வழங்கப்பட்டன.