12th August 2022 13:30:27 Hours
ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் அமைந்துள்ள உளவியல் நடவடிக்கைகளுக்கான பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பிரிகேடியர் டி.என் மஜித் புதன்கிழமை (10) தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்ற போது அவருக்கு அன்பான வரவேற்பளிக்கப்பட்டது.
புதிய பணிப்பாளர் தனது கையொப்பத்தை உத்தியோகபூர்வ ஆவணத்திற்கு இட்டு பல சிரேஷ்ட பணியாளர்கள் மற்றும் படையினரின் முன்னிலையில் தனது புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டார். பிரிகேடியர் டி.என் மஜித் இந்த நியமனத்திற்கு முன்னர் இராணுவப் புலனாய்வுப் படையணி தலைமையக நிலையத் தளபதியாகப் பணியாற்றினார்.
அவரது முன்னோடியான பிரிகேடியர் டிரால் டி சில்வா வெளிநாட்டுப் பயிற்சி பாடநெறி ஒன்றிக்காக வெளிநாடு சென்றுள்ளார்.