13th August 2021 21:30:08 Hours
யாழ்ப்பாண உள்ள 10 வது இலங்கை பீரங்கி படையணியின் (எஸ்எல்ஏ) 152 மிமீ பீரங்கிக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் நோக்கில் நிர்மானிக்கப்பட்ட பீரங்கி தளத்தின் திறப்பு விழா புதன்கிழமை (4) நடைப்பெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட கலந்து கொண்டார்.
10 வது இலங்கை பீரங்கி படையணியின் நீண்டகாலத் தேவையாக காணப்பட்ட அத்தகைய பொருத்தமான பீரங்கிக் களம் படைத் தளபதி மற்றும் பீரங்கிப் பிரிகேட் தளபதி ஆகிய இருவரும் இணைந்து நிறைவேற்றினர். இந்த நோக்கத்திற்காக முழு அர்ப்பணிப்பையும் 10 வது இலங்கை பீரங்கி படையணியின் திறமையான வீரர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் பணியாற்றினார்.
இந்த பீரங்கி தள கட்டுமானத் திட்டம் 01 அக்டோபர் 2020 அன்று சுமார் 12 மில்லியன் செலவில் தொடங்கப்பட்டது.
குறித்த பீரங்கியானது பாதகமான காலநிலைகளுக்கு இலக்காகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திறப்பு விழாவின் போது, கட்டுமானத்திற்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பிரதம விருந்தினர் அங்கு தங்கியிருந்த காலத்தில் முதுன்கொட விகாரையில் வழிப்பாட்டில் ஈடுப்பட்டார். கொவிட் 19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கண்டிப்பாக கடைப்பிடிப்பதன் மூலம் தொடக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பீரங்கி படையணியின் நிலையத் தளபதி, பிரங்கி பிரிகேட் தளபதி பீரங்கி படை பயிற்சி பாடசாலையின் தளபதி , 10 மற்றும் 14 வது இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரிகள், சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் 10 வது இலங்கை பீரங்கிப் படையணி சிப்பாய்கள் விழாவில் கலந்து கொண்டனர்.