Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th December 2024 17:51:13 Hours

இலங்கை சிங்க படையணி தலைமையக படையலகின் 25 வது ஆண்டு நிறைவு

இலங்கை சிங்க படையணி தலைமையக படையலகின் 25 வது ஆண்டு நிறைவினை படையலகு கட்டளை அதிகாரி மேஜர் ஏபீஜீடிஎஸ் விஜயதிலக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 25 நவம்பர் 2024 அன்று கொண்டாடியது.

வருகை தந்த கட்டளை அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் முகாம் வளாகத்தில் மரக்கன்று நாட்டியதுடன் குழுப்படம் எடுத்துகொண்டார். அதைத் தொடர்ந்து, கட்டளை அதிகாரி அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதுடன், அனைத்து நிலையினருடனான மதிய உணவிலும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.