Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th October 2021 07:00:31 Hours

இலங்கை சிங்கப்படையணியின் தலைமையகத்தில் விடைபெற்றுச் செல்லும் தளபதிக்கு பிரியாவிடை

இலங்கை சிங்கப் படையணியின் சிப்பாய்களால் வௌ்ளிக்கிழமை (08) இராணுவ சம்பிரதாயங்களுக்கமைவாக விடைபெற்றுச் செல்லும் அப்படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களிக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது படையணியின் தலைமையகத்திற்கு வருகை தந்த தளபதிக்கு சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அதனையடுத்து விடைபெற்றுச் செல்லும் தளபதிக்கு பிரிகேடியர் வஜீர விமலசேன அவர்களால் வரவேற்பளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் விடைபெற்றுச் செல்லும் தளபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டது.

அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து படையணி தளபதியினால் மலர் அஞ்சலி செலுத்தி செலுத்தியதை தொடர்ந்து அதிகார ஆணையற்ற அதிகாரிகளுக்கான உணவகத்தில் நடைபெற்ற விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார். இதன்போது அவர் அலுவலக கடமைகளை கைவிடுதல் தொடர்பிலான ஆவணங்களிலும் கையொப்பமிட்டார்.

நிகழ்வின் இறுதி அம்சமாக இலங்கை சிங்கப்படையின் விடைபெற்றுச் செல்லும் அதிகாரி மற்றும் சிங்கப்படை சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சிரோமி பண்டார ஆகியோரை பாராட்டும் விதமான இரவு விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் அனைத்து அதிகாரிகளும் தங்கள் துணைவியருடன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் நினைவம்சமாக விடைபெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களது சேவைக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமான படையணியின் உருவப்படம் செதுக்கப்பட்ட சின்னம் செல்வி தரஷ்னி ஹேமாமல லியனகே அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விடைபெற்றுச் செல்லும் தளபதி படையணியின் அதிகாரிகளின் பாராட்டுக்களுக்கு மத்தியில் வெளியேறினார்.