Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st January 2025 15:49:01 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையரால் பாடசாலை பொருட்கள் நன்கொடை

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு, க்ரஷ் கெண்டைனர் லைன் மற்றும் யசோதா மின்னியல் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, சிப்பாய்களின் பாடசாலை செல்லும் 50 மாணவர்களுக்கான பாடசாலை பொருட்கள் வழங்கும் நிகழ்வை 28 டிசம்பர் 2024 அன்று இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் நடாத்தியது.

யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் திருமதி தர்ஷனி யஹாம்பத் அவர்களின் மேற்பார்வையில் இத்திட்டம் நடைபெற்றது.

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அனுசரணையாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிள்ளைகளுடன் அவர்களது பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.