Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th June 2025 06:55:40 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையரால் தர்ம சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு

இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் 2025 ஜூன் 06 ஆம் திகதி தர்ம சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

சர்வதேச விபாசனா தியான நிலையத்தின் தலைமை பீடாதிபதி கம்மத்தனாச்சாரியார் மற்றும் வினாயாச்சாரியார், வே-உட தொடம்தலாவ தம்மகிரி வன விகாரையின் தலைமை பீடாதிபதி, வண. உடுதும்பர காஷியப்ப தேரர் ஆகியோரால் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சி, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்டதுடன், இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹாம்பத் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.