30th January 2023 18:10:39 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் கால்பந்து அணிக்கு புதிய வீரர்களை இணைத்துக்கொள்ளும் நோக்கில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியினால் ஒழுங்கமைக்கப்பட்ட படையலகுகளுக்கிடையேயான உதைபந்தாட்டப் போட்டி டிசம்பர் 26 .27 திகதிகளில் நடைபெற்றது. அதன் இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை (20) கண்டி திரித்துவ கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகின.
இராணுவ பதவி நிலைப் பிரதானியும் இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, முதலாவது இலேசாயுத காலாட் படையணி மற்றும் ஆறாவது இலேசாயுத காலாட் படையணிக்கு இடையிலான இறுதி போட்டியை பார்வையிட்டார்.
பிரதம அதிதியிடமிருந்து வீரர்கள் வெற்றிக்கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இப்போட்டியை கண்டுகழித்தனர்.