21st August 2023 22:43:28 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்கேஆர் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் முதலாவது, 8வது, 20 வது, மற்றும் 2 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணிகளுக்கு அவர்களின் நிர்வாக விடயங்கள் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகள் பற்றி தெரிந்து கொள்வதற்காக கள விஜயத்தை மேற்கொண்டார்.
வருகை தந்த படைத் தளபதியை அந்தந்த கட்டளை அதிகாரிகள் மரியாதையுடன் வரவேற்றதுடன், அவர்களின் தற்போதைய பங்கு மற்றும் பணிகள் குறித்து அவருக்கு விளக்கம் அளித்தனர். வருகை தந்த படைத் தளபதி படையலகுகளின் தேவைகள் மற்றும் நிர்வாக விடயங்கள் குறித்து தேவையான வழிகாட்டுதல்களை கேட்டு அறிந்து கொண்டார்.
மேஜர் ஜெனரல் எஸ்கேஆர் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் அந்தந்த படையணிகளின் சிப்பாய்களுக்கு உரையாற்றியதுடன் அவர்களுடன் சுமுகமான உரையாடலையும் மேற்கொண்டார்.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலையத் தளபதி கேணல் எல்எச்சிஆர் சிறிவர்தன ஆர்எஸ்பீ மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகளும் இவ் விஜயத்தில் பங்குபற்றினர்.