Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th December 2024 15:45:48 Hours

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் புதிய படைத் தளபதி பதவியேற்பு

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் புதிய படைத் தளபதியாக 2024 டிசம்பர் 10 ஆம் திகதி படையணி தலைமையகத்தில் நடைபெற்ற எளிய நிகழ்வின் போது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

படையணியின் புதிய தளபதி, பிரதி நிலைய தளபதியினால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, படையணியின் புதிய படைத் தளபதி, இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி படையினரால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை பெறுவதற்காக வேண்டி நிலைய தளபதியினால் அணிவகுப்பு மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர், மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

மேலும், மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் கடமைகளை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக மரக்கன்று ஒன்றை நட்டியதுடன், சம்பிரதாயமாக படையினருக்கு உரையாற்றினார். அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்துடன், நிகழ்வுகள் நிறைவடைந்தன.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.