14th June 2025 18:15:02 Hours
இலங்கை இராணுவ மருத்துவப் படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 ஜூன் 10 ஆம் திகதி கொழும்பு இராணுவ மருத்துவமனையில் பொசன் பௌர்ணமி தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வில் மதவச்சியைச் சேர்ந்த வண. தம்மஜோதி தேரர் அவர்களினால் தர்ம சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐஸ்கிரீம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ மற்றும் இலங்கை இராணுவ மருத்துவப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி டி.டி.பீ லிலந்தி தொலகே ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.