Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd April 2024 18:25:37 Hours

இலங்கை இராணுவ மகளிர் படையணி வெளிச்செல்லும் படையணி படைத் தளபதிக்கு பிரியாவிடை

இலங்கை இராணுவ மகளிர் படையணி, இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.யூ.பீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜி அவர்களுக்கு 18 ஏப்ரல் 2024 அன்று பொரளை படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், அவர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வ ஒப்படைப்பு ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது பதவியை ஒப்படைத்தார்.

இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதி தனது படையினருக்கான உரையின் போது, இலங்கை இராணுவ மகளிர் படையணியில் பணிபுரியும் அனைத்து நிலையினருக்கும் தனது சேவைக்காலத்தின் போது இலங்கை இராணுவ மகளிர் படையணியின் வெற்றி மற்றும் துணைக் கலாசாரத்தைப் பேணுவதற்காகவும், அர்ப்பணிக்கப்பட்ட சேவையை வழங்கியமைக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும் அவர் புறப்படுவதற்கு முன்னர், வீழ்ந்த போர் வீரர்களின் போர் வீரர் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினார்.

அன்றைய தினத்திற்கு நினைவுகளைச் சேர்க்கும் வகையில் வெளிச்செல்லும் படையணியின் படைத் தளபதி குழு படம் எடுத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இறுதியில், படையணியின் படைத் தளபதி விருந்தினர் திவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக்களை எழுதினார்.