Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th September 2024 19:44:09 Hours

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையரால் நன்கொடை திட்டம்

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவு 2024 செப்டம்பர் 14 அன்று இராணுவ வழங்கல் தொழிற்சாலை, மத்திய ஆயுத மற்றும் வெடிமருந்து களஞ்சியம், இராணுவ ஆடை களஞ்சியம் ஆகியவற்றில் பணிபுரியும் 26 சிவில் ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உலர் உணவு பொதிகளை வழங்கியது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெர்னாண்டோ மற்றும் வழங்கல் கட்டளைத் தளபதியும் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சீஎல்எஸ்சீ ஏஏடீஓ அவர்கள் கலந்து கொண்டனர்.

நன்கொடைகளை வழங்கலை தொடர்ந்து, இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவினால் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.