Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th August 2024 14:20:53 Hours

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையரினால் இரத்மலானை செவிப்புலனற்ற மாணவர்களுக்கு நன்கொடை

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனிஷா கொத்தலாவல அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 1 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியுடன் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவு இணைந்து இரத்மலானை செவி விழிப்புலனற்றோர் பாடசாலையில் 2024 ஜூலை 13 அன்று நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள், சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொதிகள் வழங்கப்பட்டன. சுவையான மதிய உணவுடன் நிகழ்வு நிறைவடைந்ததுடன் இது பிள்ளைகளுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கியது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.