12th April 2025 14:12:41 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவுடன் இணைந்து, 2025 ஏப்ரல் 6 ம் திகதி பனாகொடை இலங்கை சமிக்ஞை படையணி விளையாட்டு மைதானத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடியது.
இலங்கை இராணுவத்தின் இராணுவச் செயலாளரும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் யூஎல்ஜேஎஸ் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெரேரா அவர்களுடன் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பனிஸ் சாப்பிடுதல், தலையணை சண்டை, புத்தாண்டு ராஜா மற்றும் ராணி தேர்ந்தெடுத்தல், யானைக்கு கண் வைத்தல், சமநிலை ஓட்டம், கயிறு இழுத்தல், விநோத உடை போட்டிகள் போன்ற 26 நிகழ்வுகள் உட்பட பல்வேறு வேடிக்கையான விளையாட்டுகளும் இடம்பெற்றன.
நிகழ்வின் முடிவில், படைத் தளபதி மற்றும் ஏனைய அதிதிகள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். நேரடி இசை நிகழ்ச்சியுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.