Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th August 2021 14:30:47 Hours

இலங்கை இராணுவ பொது சேவை படையினர் தேயிலை பயிரிடல்

முதலாவது இலங்கை இராணுவ பொது சேவை படையினர் சில தினங்களுக்கு முன்பதாக தியதலாவ பகுதியில் தேயிலை நாற்றுக்களை பயிரிடும் திட்டத்தை ஆரம்பித்தனர்.

இராணுவத் தளபதியின் அறிவுறத்தல்களுக்கு அமைவாக இராணுவ துரு மிதுரு நவ ரட்டக் எனும் திட்டத்தின் கீழ் பரீட்சாதமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

திட்டமானது இலங்கை இராணுவ பொது சேவைப் படையின் படைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ் முதலாவது இலங்கை இராணுவ பொது சேவைப் படையின் கட்டளை அதிகாரி லெப்டிணட் கேணல் தெமுனி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.