Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th November 2021 15:38:42 Hours

இலங்கை இராணுவ பயிற்சி கட்டளையின் புதிய தளபதி கடமைகளை ஆரம்பிக்கிறார்

தியத்தலாவவில் இலங்கை இராணுவ பயிற்சி கட்டளையின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே 30 ஒக்டோபர் 2021 அன்று பதவியேற்றுக்கொண்டார்.

இலங்கை இராணுவ பயிற்சி கட்டளையின் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய தளபதிக்கு தத்துவ மற்றும் கண்காணிப்பு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் உதய ஹேரத் சிரேஸ்ட பணிநிலை அதிகாரிகளுடன் ல் வரவேற்றார்.

இதன்போது மத அனுட்டானங்களுக்கு மத்தியில் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்கள் சிரேஸ்ட அதிகாரிகளின் முன்னிலையில் கடமைகளை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு கடமைகளை ஆரம்பித்தார்.

அதனை தொடர்ந்து இலங்கை இராணுவ பயிற்சி கட்டளையின் தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த தளபதி இலங்கை இராணுவ பயிற்சி கட்டளையின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான உரையினையும் நிகழ்த்தினார்.

மேற்படி நியமனத்தை பெற்றுக்கொள்ளும் முன்பாக இராணுவ முதலாம் படையணியின் 53 வது படைப்பிரிவு தளபதியாக பணியாற்றியதோடு, அவர் 53 வது படைப்பிரிவு தலைமையகத்தின் தளபதியாக பணியாற்றிய காலத்தில் மாத்தளை மாவட்ட கொவிட் – 19 பரவல் தடுப்பு செயலணியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.