Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th May 2020 10:38:26 Hours

இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதி உயிர் நீத்த படையினருக்கு அனுராதபுராவில் அஞ்சலி

இராணுவத்தின் பதவி நிலை பிரதானியும், இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்கள் திங்கட்கிழமை (18) அனுராதபுரம் இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணியின் பயிற்சி நிலையம், , 3 ஆவது இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணி தலைமையகம் மற்றும் 7 வது தொண்டர்) இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணி தலைமையகம் ஆகியவற்றுக்கு விஜயத்தை மேற்கொண்டார். அவர் அனுராதபுரத்தில் தங்கியிருந்தபோது, அனுராதபுர மருத்துவமனை சுற்றுவட்டத்திலுள்ள மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவ சிலைக்கும், அனுராதபுர சல்காடோ விளையாட்டு மைதானத்திலுள்ள உயிர் நீத்த படை வீரர்களின் நினைவு தூபிக்கும் மற்றும் கலத்தேவ கவசப் படை முகாமில் உள்ள படை வீரர்களின் நினைவு தூபிக்கும் தேசிய படை வீரர் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தினார்.

படையினருக்கு உரையாற்றும் போது, தற்போது பரவி வரும் கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் படையினரின் பங்களிப்பு மதிப்புமிக்க பொறுப்புகளையும் வலியுறுத்தினார். சீருடையில் படையினரின் மனிதாபிமானத்தின் தரத்தையும் அவர் எடுத்துரைத்தார். மேலும் தேசத்தின் நலத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தினார். Sportswear free shipping | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger