Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th July 2021 18:14:19 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதி 14 வது (தொ) கெமுனு ஹேவா படையணிக்கு விஜயம்

இலங்கை இராணுவத் தொண்டர் படைத் தளபதியும் இலங்கை பீரங்கிப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, 2021 ஜூலை 07 அன்று வரலாற்று சிறப்புமிக்க மற்றும் அழகிய காலி கோட்டைக்குள் அமைந்துள்ள 14 வது (தொ) கெமுனு ஹேவா தலைமையகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

தளபதியின் வருகையின் போது பிரதான நுழைவாயிலில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன், கட்டளை அதிகாரியான மேஜர் எஸ்.ஏ.அபேசேகரவினால் ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட முகாம் வளாகத்தின் தற்போதைய நிலை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

தெற்கின் தலைநகரமான காலியில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அற்புதமான நினைவுச்சின்னமான காலி கோட்டை ஆரம்பத்தில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது. பின்னர் இக்கோட்டை டச்சுக்காரர்களால் கடல் நிர்வாகத்தின் அற்புதமான மற்றும் பாதுகாப்பான இடமாக மாற்றப்பட்டது. 1883 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ரோயல் காலாட்படை நிறுவனத்தின் ஒரு தொண்டர் படைகள் காலியில் நிறுத்தப்பட்டதாகவும், பின்னர், 13 வது இலங்கை காலாட்படை படைப்பிரிவு அதே இடத்தில் நிறுத்தப்பட்டதாகவும் வரலாறு பதிவுகள் காணப்படுகின்றன. அடுத்தடுத்த காலகட்டத்தில், 2 வது (தொ) கெமுனு ஹேவா காலியில் காலி கோட்டைக்குள் நிறுவப்பட்டது. தற்போது, 14 வது (தொ) கெமுனு ஹேவா படையினர் இந்த வளாகத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

தனது வருகையின் நினைவாக குறித்த வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த தளபதியின் விஜயத்தின் போது இடம்பெற்ற நிகழ்வில் (3) வது (தொ) கெமுனு ஹேவா படையணி, (12) வது (தொ) பொறியியல் சேவை படையணி மற்றும் (2) வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகள் கலந்துகொண்டதுடன் அப்படையணிகளின் தற்போதய நிலைமை மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பான விளக்கங்களை தளபதிக்கு வழங்கினர்.

பின்னர் படையினரால் அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்களுக்காக ஏற்பாடு செய்ய்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் தளபதி கலந்துகொண்டார். இதன்போது மேற்படி படைப்பிரிவுகளின் மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் பாராட்டுக்களை தெரிவித்த தளபதி விருந்தினர் பதிவேட்டில் தனது எண்ணங்களை குறிபிட்டதை தொடர்ந்து நிகழ்ச்சி நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியில் இலங்கை இராணுவ தொண்டர் படையின் பிரதி தளபதி பிரிகேடியர் எஸ்.என்.சமரவிக்கிரம, இலங்கை இராணுவ தொண்டர் படையின் பயிற்சி பொறுப்பதிகாரி , சிரேஸ்ட அதிகாரிகள், மற்றும் ஏனைய சிப்பாய்கள் கலந்துகொண்டனர். உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றும் வகையில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.