08th April 2024 09:03:06 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ அவர்கள் 04 ஏப்ரல் 2024 அன்று காவண்திஸ்ஸபுரிவில் உள்ள 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணிக்கு விஜயம் செய்தார்.
படையணி வளாகத்திற்கு வருகை தந்த பிரதித் தளபதிக்கு 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் வாகன தொடரணி மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிரேஷ்ட அதிகாரியை கட்டளை அதிகாரி மேஜர் சி.ஆர் திஸாநாயக்க அன்புடன் வரவேற்றதுடன் 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் செயல்பாடுகள் பற்றிய விரிவான விளக்கத்தையும் வழங்கினார்.
அன்றைய தினத்திற்கு நினைவுகளைச் சேர்க்கும் வகையில், பிரதித் தளபதி படையலகின் ஊழியர்களுடன் சில குழு படங்களை பெற்றுக் கொண்டதுடன் வளாகத்தில் மரக்கன்றினையும் நடுவதற்கும் அழைக்கப்பட்டார். பின்னர், சிரேஷ்ட அதிகாரி படையினருக்கு உரையாற்றியதுடன் அதனைத் தொடர்ந்து அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரமும் இடம்பெற்றது.
பின்னர், வருகையைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இறுதியில், பிரதித் தளபதி விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை எழுதினார்.
இந்த விஜயத்தின் போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் உடனிருந்தனர்.