23rd October 2021 14:35:16 Hours
143 வது பிரிகேடின் முதலாவது இலங்கை தேசிய பாதுகாவல் படையணியின் படையினர் சமீபத்தில் மாஹவ பிராந்திய வைத்தியசாலையின் புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்கு உதவிகளை வழங்கினர்.
மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் அறிவுறுத்தலில் 14 வது படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டுதலில் 143 வது பிரிகேட் தளபதி கேணல் பௌமீ கிட்ச்சிலன் அவர்களின் மேற்பார்வையில் இவ்வாறு புனரமைக்கப்பட்ட வார்டுகள் முறையாக வைத்தியசாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.