Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th December 2024 16:47:25 Hours

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையரால் நன்கொடை மற்றும் நத்தார் கெரோல்

22 டிசம்பர் 2024 அன்று மொரட்டுவ சுரச விசேட கல்விப் பாடசாலை மற்றும் மகளிர் இல்லத்தின் மாணவர்களுக்கான நன்கொடை மற்றும் நத்தார் கெரோல் நிகழ்வை இராணுவ சேவை படைப் பாடசாலை சுதந்திர விநியோகக் பிரிவு, சுயாதீன போக்குவரத்துப் படை போன்றவை வெற்றிகரமாக நடாத்தின.

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சந்தி ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இராணுவ சேவைப் படையணி பாடசாலையின் தளபதி ஜீடிசீ மதுரவல யூஎஸ்பீ கியூஎல்சீஓ, சுதந்திர விநியோகக் பிரிவின் தளபதி டிகேஎஸ் நோல்டன் மற்றும் சுயாதீன போக்குவரத்துப் படையின் தளபதி லெப்டினன் கேணல் எச்எம்டபிள்யூஆர் ஹேரத் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.