11th August 2021 17:40:16 Hours
இலங்கை இராணுவ சமிக்ஞை படை தலைமையக வளாகத்தில் புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் லலித் ஹேரத் அவர்கள் செவ்வாய்க்கிழமை (10) படையினரால் கௌரவிக்கப்பட்டார்.
மேற்படி நிகழ்வின் ஆரம்பமாக இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் அசோக குணசேகர அவர்களால் நிலை உயர்வு பெற்ற அதிகாரிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதோடு, பாதுகாவலர் அறிகையிடல் மரியாதை படையினரால் வழங்கப்பட்டது. அதனையடுத்து போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு தளபதி மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவரது வருகையின் நினைவாக தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்தின் பின்னர் குழு புகைப்படும் எடுக்கும் நிகழ்விலும் அவர் கலந்துகொண்டா