04th March 2024 12:49:49 Hours
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ கவச வாகனப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அதிகாரிகள் பயிற்சி நாள் மற்றும் 2024 உணவருந்தும் சங்கம் என்ற நிகழ்வு இராணுவ கவச வாகனப் படையணி தலைமையகத்தில் 21 பெப்ரவரி 2024 அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இராணுவ கவச வாகனப் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் பயிற்சியில் பங்கேற்றனர், இப்பயிற்சியானது தொழிலாண்மையை மேம்படுத்துவதாகும்.
பயிற்சி நாளில் பங்கேற்பாளர்களின் திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கல்வி விரிவுரைகள், உடற்பயிற்சி மற்றும் வாள் பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சி வழங்கப்பட்டன.
மாலையில் உணவகத்தில் நரம்பியல் மொழியியல் நிரலாக்கம் மற்றும் மன தசை அதிர்வு சிகிச்சை மூலம் சுய தலைமைத்துவம் தொடர்பான விரிவுரை நடைபெற்றது. இந்த அமர்வு தலைமைத்துவ மற்றும் ஆளுமைப் பயிற்சி நிபுணர் கலாநிதி குமா இந்தமல்லென அவர்களால் நடத்தப்பட்டது,
அதிதி விரிவுரையாளர், கலாநிதி குமா இந்தமல்லென அவர்கள் பணியாளர் கடமைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பீ.ஆர் பத்திரவிதான யூஎஸ்எடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
கவச வாகனப் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ், கவச வாகனப் பிரிகேட்டினரின் அர்ப்பணிப்பு ஒருங்கிணைப்பு மூலம் இப் பயிற்சித் திட்டம் தடையின்றி சாத்தியமானது. பங்கேற்பாளர்கள் அனைவரும் வளமான அனுபவத்தை பெற்றனர்.