Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th March 2024 21:40:16 Hours

இலங்கை இராணுவத்தினால் யாழ். குடாநாட்டில் 100 ஏக்கர் நிலம் உரியவர்களிடம் ஒப்படைப்பு

யாழ் குடாநாட்டில் உள்ள காணிகளின் உரிமையை உரியவர்களிடம் 2024 மார்ச் 10 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை இராணுவம் மீள ஒப்படைத்தது. இதற்கு முன்னர் இராணுவத்தினரின் வசமிருந்த காணிகள் தொடர்ச்சியாக 24 கட்டங்களாக முறையாக விடுவிக்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் 5 காணிகள் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் 7 காணிகள் என மொத்தம் 109.56 ஏக்கர் காணிகள் மீளளிக்கப்பட்டன. தற்போது 0.54% நிலப்பரப்பு மட்டுமே இராணுவத்தின் வசமிருக்கின்றது. இப்பகுதியில் இயல்புநிலை மற்றும் பாதுகாப்பை பேணுவதற்கு அவசியமானதாகக் கருதப்படுகிறது. 109.56 ஏக்கர் காணி தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்கள் யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர்களிடம் அடையாளமாக கையளிக்கப்பட்டன.

காணிகளை உரியவர்களிடம் மீள ஒப்படைக்கும் இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியே காணி விடுவிப்பு. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியுமான கௌரவ. திரு.சாகல ரத்நாயக்க அவர்கள் கலந்துகொண்டார்.கௌரவ டக்ளஸ் தேவானந்தா (பா.உ), சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.