23rd August 2024 17:33:10 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் விஷேட படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 16 ஆகஸ்ட் 2024 அன்று விஷேட படையணி தலைமையகத்தில் தொற்றா நோய்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
நாலந்த வைத்தியசாலையின் வைத்தியர் பந்துல விஜேசூரிய மற்றும் அவரது குழுவினால் இந்த மருத்துவ சிகிச்சை முகாம் தொற்றா நோய்களின் பல்வேறு அம்சங்களைப் பற்றி படையினருக்குக் கற்பிக்கும் நோக்கத்துடன் நடாத்தப்பட்டது. இந்த மருத்துவ சிகிச்சை முகாமில் உடல்நலப் பரிசோதனைகள், தனிப்பட்ட ஆலோசனைகள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.