17th April 2024 16:51:46 Hours
கொஸ்கமவில் உள்ள இராணுவத் வழங்கல் கட்டளையில் கடமையாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து 09 ஏப்ரல் 2024 அன்று தலைமையக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர்.
இராணுவ வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எம்டப்ளியூடிசி மெத்தானந்த யூஎஸ்பீ என்டிசி அவர்கள் சில சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து மங்கல விளக்கேற்றியதன் பின்னர் நிகழ்வுகள் ஆரம்பமானது.
பனிஸ் சாப்பிடுதல், தலையணை சண்டை, யானைக்கு கண் வைத்தல், கயிறு இழுத்தல், வினோத உடை போட்டி மற்றும் பல பாரம்பரிய மற்றும் வேடிக்கையான விளையாட்டுகள் பார்வையாளர்கள் அனைவரையும் மிகவும் மகிழ்விக்கும் வகையில் அன்றைய நிகழ்ச்சிகளில் ஆதிக்கம் செலுத்தியன. விழாவின் நிறைவில் இராணுவ வழங்கல் கட்டளை தளபதி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கிண்ணங்களை வழங்கினர்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிள்ளைகள் புத்தாண்டு மரபுகள் மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் தொடர்புடைய இந்நிகழ்வில் பங்குபற்றினர்.