Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th July 2024 17:20:04 Hours

இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையரினால் தரம் 1 மாணவர்களுக்கு உதவி

இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. எச்.ஜி. சுவர்ணலதா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2024 ஜூலை 27 அன்று இலங்கை இராணுவ முன்னோடி படையணியில் நன்கொடை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந் நிகழ்வு தரம் 1க்கு அனுமதி பெறும் பிள்ளைகளுக்கு சீருடை மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.