Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th December 2021 12:21:56 Hours

இராணுவ பொறியியலாளர் பிரிவின் புதிய தளபதி அலுவலக கடமைகளை பொறுப்பேற்கிறார்

இலங்கை இராணுவப் பொறியியலாளர் படைப் பிரிவின் புதிய தளபதியாக நியமனம் பெற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன புதன்கிழமை (22) மத்தேகொட இராணுவ படைமுகாம் தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

வருகை தந்த புதிய தளபதிக்கு படைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களால் வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் நியமனத்தை ஏற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார். மேற்படி புதிய நியமனத்திற்கு முன்னர் மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன 55 வது படைப்பிரிவு தளபதியாக நியமனம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் புதிய தளபதிக்கு முன்னதாக மேற்படி நியமனத்தை வகித்த மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர அவர்கள் இராணுவ தலைமையகத்தின் தலைமை கள பொறியியலாளராக நியமனம் பெற்றுக்கொண்டுள்ளார்.