23rd May 2019 23:37:10 Hours
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் இராணுவ பொது சேவைப் படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சாஜன்களுக்கான தங்குமிட விடுதி இம் மாதம் (23) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதி அவர்களை இராணுவ பொது சேவைப் படையணியின் படைத் தளபதி மற்றும் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வஜீர பலிஹக்கார அவர்களால் வரவேற்றகப்பட்டார் . பின்னர் இராணுவ தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் படையினரால் வழங்கி இராணுவ தளபதி வரவேற்கப்பட்டார்.
இராணுவ தளபதி பின்பு படைத் தலைமையக வளாகத்தினுள் அமைந்திருக்கும் இராணுவ நினைவு தூபிக்கு சென்று உயர்நீத்த படை வீரர்களை நினைவு கூர்ந்து கௌரவ அஞ்சலியை செலுத்தினார்.
இராணுவ தளபதி அதன் பின்னர் படையினர்கள் மத்தியில் விஷேட உரையொன்றும் நிகழ்த்தி புதிதாக நிர்மானிக்கப்பட்ட சாஜன் விடுதியையும் திறந்து வைத்தார். பின்னர் படைத் தலைமையக வளாகத்தினுள் இராணுவ தளபதி அவர்களினால் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.
இறுதியில் இராணுவ தளபதி அவர்களினால் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் கையொப்பமிட்டு விடை பெற்றுச் சென்றார்.
இந்த புதிய கட்டிட நிர்மான பணிகள் இராணுவம் மற்றும் படையணியின் அனுசரனை நிதியுடன் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் இராணுவ குடும்பங்களது நலன்புரி நிமித்தம் ரூ. 825,000 காசோலையும் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பலிஹகார அவர்களினால் இந்த நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்விற்கு இந்த படையணியைச் சேர்ந்த சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற மூத்த உயரதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர். Nike Sneakers | シューズ