16th April 2024 17:21:11 Hours
12 வது காலாட் படைப்பிரிவில் சேவையாற்றும் இராணுவப் புலனாய்வுப் படையணி படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் கொஸ்லந்த, மொனராகலை பகுதியில் உள்ள கஞ்சா தோட்டமொன்றை 09 ஏப்ரல் 2024 அன்று சுற்றி வளைத்தனர்.
இந்த சுற்றி வளைப்பின் போது, 12000 க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த திட்டம் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.பி அலுவிகார ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டது.