11th November 2024 13:11:47 Hours
இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் 2024 நவம்பர் 09 அன்று கண்டியில் ஒரு ஆதரவற்ற குடும்பத்திற்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத் தளபதியின் வழிகாட்டலின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
6 வது சிங்க படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன் கேணல் இஜேபியூபீ எகொடகெதர யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 6 வது இலங்கை சிங்க படையணியின் படையினரால் இப்புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.
நிகழ்வின் போது மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் வீட்டின் சாவியை பிரதம அதிதி உத்தியோகபூர்வமாக பயனாளியிடம் கையளித்தார். இலங்கை சிங்க படையணியின் அனைத்து படையலகுகளின் தாராளமான நிதி பங்களிப்புகளின் மூலம் இந்த திட்டம் சாத்தியமானது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.