Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th August 2021 15:40:15 Hours

இராணுவ நடமாடும் தடுப்பூசி செயறிட்டம் கொழும்பு புறநகர்ப் பகுதிகளில்

60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பலவீனமான பிரிவினருக்கு தடுப்பூசி வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கும் இராணுவத்தின் நடமாடும் கொவிட் -19 தடுப்பூசி செயறிட்டம் ஞாயிற்றுக்கிழமை (22) மேல் மாகாணத்தில் நுகேகொட, கங்கொடவில, ராஜகிரிய, மொரட்டுவை மற்றும் பாணந்துறை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டமானது மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் உத்தரவின் பேரில் பனகொட இராணுவ வைத்தியசாலை வளாகத்தில் இருந்து தொடங்கப்பட்டது.

இந்த தேசிய திட்டமானது பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் (NOCPCO) தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் படி மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதியும் கொழும்பு மாவட்ட கொவிட் கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளருமான மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் மேற்பார்வையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நடமாடும் சேவை தேவைப்படும் முதியவர்கள் அந்தந்த உதவி பிரதேச செயலகங்கள், கிராம சேவை அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மாவட்ட செயலகத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும் அல்லது பாதுகாப்பு படைத் தலைமையகம் (மேற்கு) அல்லது கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தேவையான ஒருங்கிணைப்புகளை செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தடுப்பூசி திட்டம் 14 மற்றும் 61 வது படைப்பிரிவுகளின் தளபதிகளின் மேற்பார்வையில் பிரிகேட் தளபதிகளின் ஒத்துழைப்பில் முன்னெடுக்கப்பட்டது.