Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th October 2021 12:52:07 Hours

இராணுவ தினத்தை முன்னிட்டு ஸ்ரீபுரவில் வரிய குடும்பத்திற்கு புதிய வீடு

இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு விழாவை முன்னிட்டு கெமுனுபுர பதவி -ஸ்ரீபுரவில் வசிக்கும் திரு. ஆர்.எம். ரணசிங்க அவர்களின் குடும்பத்திற்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் திறப்பு விழா நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10 ஒக்டோபர் 2021) இடம்பெற்றது.

9 வது கஜபா படையணியின் படையினர் மற்றும் 62 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர ஆகியோரின் நிதி அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டின் கட்டுமானப் பணிகள் அப்படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் சேனக முனசிங்க அவர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்துடன் இவ்விட்டின் நிர்மாணத்திற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை அப்படையணியினரே வழங்கினர்.

வீடற்றோருக்கான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய வீட்டுத் திட்டத்திற்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் வீடு கட்டும் சமூக நலத் திட்டம் அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

622 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுர அபேசிங்க அவர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டமானது 62 வது படைப்பிரிவுத் தளபதி மற்றும் 622 வது பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்டது. வீடு கையளிக்கும் விழாவில் சிறிபுர ராஜமகா விகாரையின் தேரர் மற்றும் கிராம உத்தியோகத்தர், பிரசே அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பயனாளியின் உறவினர்களும் கலந்து கொண்டனர்