Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th October 2022 18:21:05 Hours

இராணுவ தளபதிக்கு முன்னாள் படைவீரர்கள் பொப்பி மலர் அணிவிப்பு

போரில் உயிரிழந்த அனைத்து போர்வீரர்களின் நினைவுகளை நினைவுகூரும் பொப்பி தினத்தினை (நவம்பர் 11) முன்னிட்டு இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பிரதிநிதிகள் இராணுவ தலைமையகத்தில் இன்று பிற்பகல் (19) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு பொப்பி மலர் ஒன்றை அணிவித்தனர்.

முன்னாள் படைவீரர் சங்கத்தின் உப தலைவர் மேஜர் ஜெனரல் ஈ.எம்.எம்.அம்பன்பொல யு.எஸ்.பி. (ஓய்வு) அவர்களினால் பொப்பி தினத்தினை அடையாளப்படுத்தும் முகமாக இராணுவ தளபதிக்கு பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.

முன்னாள் படைவீரர் சங்க செயலாளர் லெப்டினன் கேணல் ஏ.கே. சியம்பலாபிட்டிய பிஎஸ்சி எல்எஸ்சி (ஓய்வு), முன்னாள் படைவீரர் சங்க பொருளாரர் மேஜர் பி.கே.சி.எஸ் கண்கணங்கே யுஎஸ்பி மற்றும் படைவீரர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலின் போது, இராணுவத் தளபதி அப் பிரதிநிதிகளுடன் சுமுகமான கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன் அவர்களின் தற்போதைய நலன்புரி திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந் நிகழ்வினை தொடர்ந்து இராணுவத் தளபதி, அவர்களின் பணியைப் பாராட்டி இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு நினைவுப் பரிசினை வழங்கி அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

முதல் உலகப் போரின் முடிவில் இருந்து அனைத்து பொதுநலவாய நாடுகள் உட்பட, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11 ஆம் திகதி உலகம் முழுவதும் நினைவு தினம் அல்லது பொப்பி தினம் நினைவுகூரப்படுகிறது.