Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ டெனிஸ் வீரர்கள் தேசிய மட்டத்தில் வெற்றி

இலங்கை டெனிஸ் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேசிய டெனிஸ் விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழா (5) ஆம் திகதி கொழும்பு 7 டொரின்டனில் அமைந்துள்ள டெனிஸ் தொகுதி மைதானத்தில் இடம்பெற்றன.

இந்த டெனிஸ் இறுதிச் சுற்று போட்டிகள் இலங்கை இராணுவம் மற்றும் விமானப் படையினருக்கு இடையில் இடம்பெற்றது. இந்த போட்டிகளில் இலங்கை இராணுவத்தினர் வெற்றியினை சுவீகரித்து கொண்டனர்.

இந்த போட்டிகளில் எஸ்எஸ்சி டெனிஸ் கழகம், விமானப்படை டெனிஸ் அணி, இலங்கை டெனிஸ் கழகம் மற்றும் சிஓஎஸ்எம்ஓ டெனிஸ் கழகம், இலங்கை இராணுவ டெனிஸ் அணிகள் பங்கு பற்றின்.

நடைபெற்ற போட்டியில் இராணுவ அணியானது சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டன. இலங்கை இராணுவ அணியில் விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த கோப்ரல் எம்.எச்.எஸ்.ஆர் ஹேமந்த, இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் பொம்படியர் பீ.எம்.சி உத்பால குமார, லான்ஸ் பொம்படியர் ஆர்.எம்.எஸ் சேனாநாயக, விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எஸ்.ஏ.என் புஸ்ப குமார, லான்ஸ் கோப்ரல் பி.ஜி.எம் சமரவீர, சிங்கப் படையணியைச் சேர்ந்த போர் வீரன் ஆர்.ஏ.ஜி.கே.கே ராஜபக்‌ஷ போன்ற விளையாட்டு வீரர்கள் பங்கு பற்றினர்.

இந்த நிகழ்வில் இராணுவ டெனிஸ் சங்கத்தின் பிரதிநிதிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் கூடுதலானோர் இணைந்திருந்தனர்.

Best jordan Sneakers | Sneakers