23rd January 2024 17:26:51 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் அண்மையில் அனுராதபுரம் அபிமன்சல-1 நலன்புரி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
தனது விஜயத்தின் போது, தலைவி அவர்கள் அங்கு வசிக்கும் போர் வீரர்களுடன் சுமுகமாக உரையாடியதுடன், அவர்களின் நலம் மற்றும் அவர்களின் முன்னேற்றம் தொடர்பாக கேட்டறிந்தார். சந்திப்பின் இறுதியில் பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
மேலும், சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் போர் வீரர்களின் நீச்சல் தடாகத்தைப் பராமரிப்பதற்குத் தேவையான சுத்தம்படுத்தும் பொருட்களை தலைவி அன்பளிப்பு செய்தார்.
தங்கி இருப்பவர்களின் பணிகளைப் பாராட்டியதுடன் தலைவி அவர்கள் போர்வீரர்களின் கைவினைப் பொருட்களைப் பார்வையிட்டதுடன், ஆயுர்வேத வைத்தியசாலையையும் பார்வையிட்டார்.
புறப்படுவதற்கு முன், தலைவி அவர்கள் அங்கு வசிக்கும் போர் வீரர்களுடன் குழு படம் எடுத்துகொண்டார்.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.