Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th April 2020 18:33:07 Hours

இராணுவம், கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்த நபர்கள் விடுவிப்பு

இராணுவத்தினால் பராமரித்து வரும் கட்டுகேலிய , தியதலாவை தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மற்றும் கடற்படையினால் பராமரித்து வரும் பூசா தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்த 62 பேர் மூன்று வாரகாலமாக தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகளின் பின்பு சான்றிதழ்களுடன் இம் மாதம் (29) ஆம் திகதி தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

புத்தளம் மற்றும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த நபர்களே இராணுவத்தினரது போக்குவரத்து வசதிகளுடன் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். bridgemedia | New Releases Nike