17th December 2024 13:52:41 Hours
இராணுவப் போர்க் கல்லூரி படையினருக்கு குடிநீர் வழங்குவதற்காக, இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் எச்எச்கேஎஸ்எஸ் ஹெவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 12 டிசம்பர் 2024 அன்று வளாகத்தில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டது.
நீர் சுத்திகரிப்பு ஆலையின் நிறுவலானது இராணுவப் போர்க் கல்லூரியின் நீண்டகால தேவையை நிவர்த்தி செய்வதற்காக, தரமற்ற குடிநீரின் காரணமாக படையினரிடம் நாள்பட்ட சிறுநீரக நோயை தடுக்க உதவுவதாகும். புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒரு நாளைக்கு 5,000 லிட்டர் நீரை வழங்கும் திறன் கொண்டது.