Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th December 2024 13:48:30 Hours

இராணுவப் போர்க் கல்லூரியின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

பிரிகேடியர் டிசீஎம்ஜீஎஸ்டி குரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 15 டிசம்பர் 2024 அன்று, புத்தள இராணுவப் போர்க் கல்லூரியின் புதிய தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.

வருகை தந்த புதிய தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், பிரதி தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார். மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில், புதிய தளபதி தனது கடமையை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

கடமைகளை பொறுப்பேற்ற பின்னர், தளபதி அவர்கள் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நட்டு, குழு படம் எடுத்துக்கொண்டதுடன், படையினருக்கு உரை நிகழ்தினார். அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்துடன் நிகழ்வு நிறைவடைந்தது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.