Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th April 2024 17:55:08 Hours

இராணுவத் தொண்டர் படையணியின் பிரதித் தளபதி ஓய்வு பெறுவதற்கு முன் தனது தாயக படையலகிற்கு விஜயம்

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் எம்.டி.கே.ஆர் சில்வா கேஎஸ்பீ அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னர் 2024 ஏப்ரல் 20 ஆம் திகதி 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.

5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, நுழைவாயிலில் சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து மரியாதையுடன் வரவேற்றார். பின்னர் முகாம் வளாகத்தில் உள்ள நினைவுத்தூபியில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

சிரேஷ்ட அதிகாரி, கட்டளை அதிகாரியின் அழைப்பின் பேரில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதான நுழைவாயிலை திறந்து வைத்ததுடன், வளாகத்தில் உள்ள படையினருக்கு உரையாற்றினார். அவர் புறப்படுவதற்கு முன், விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை எழுதினார்.

இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.