Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th April 2025 12:45:42 Hours

இராணுவத் தளபதி அபிமன்சல - II புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்குபற்றல்

கம்புருபிட்டிய அபிமன்சல - II நல விடுதியில் 2025 ஏப்ரல் 06 ம் திகதி நடைபெற்ற சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

கம்புருபிட்டிய அபிமன்சல - II நல விடுதியின் தளபதி பிரிகேடியர் ஆர்ஜீஎல்கே வீரகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் வருகை தந்த பிரதம அதிதியை வளாகத்தில் மரியாதையுடன் வரவேற்றார். பின்னர், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வு பிரதம அதிதியின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து பூஜா நடனமும் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளி போர் வீரர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புத்தாண்டு விளையாட்டுகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. இந்த நிகழ்விற்கு உற்சாகத்தை சேர்க்கும் வகையில், புத்தாண்டுக்கான அழகு ராணி மற்றும் அழகு ராஜா தெரிவு செய்தல் போட்டி, வந்திருந்த அனைவருக்கும் பண்டிகை மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது.

அபிமன்சாலா-II இன் மாற்றுத்திறனாளி போர் வீரர்களால் நிகழ்த்தப்பட்ட சக்கர நாற்காலி நடனம் மற்றும் கிராமத்து வீடு (கெமி கெதர) நிகழ்வு பார்வையாளர்களிடமிருந்து பாராட்டைப் பெற்றது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவிற்கு மறக்கமுடியாத முடிவைக் குறிக்கும் வகையில், சிறப்பு விருந்தினர்களால் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதன் மூலம் கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அபிமன்சல-II இன் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.