Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவத்தின் 22 ஆவது பரா மெய்வல்லுனர் போட்டிகள் டிசம்பர் 27 ஆம் திகதி ஆரம்பம்

இலங்கை இராணுவத்தின் 22 ஆவது பரா மெய்வல்லுனர் போட்டிகள் இம் மாதம் 27 – 29 ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ மைதானத்தில் 11 இராணுவ படையணிகளிலுள்ள 700 விஷேட தேவையுடைய படை வீரர்களின் பங்களிப்புடன் இடம்பெறும்.

2019 ஆம் ஆண்டிற்கான பரா மெய்வல்லுனர் போட்டிகள் டயலொக் அக்‌ஷிஏடா தனியார் நிறுவனத்தின் அனுசரனையில் இடம்பெறும்.

இந்த போட்டிகளில் வில்வித்தை, பூப்பந்து, சைக்கிள் ஓட்டம், , டேபிள் டென்னிஸ், பவர்-லிஃப்டிங், சக்கர நாற்காலி மரதன், டென்னிஸ், கைப்பந்து, ரோயிங், நீச்சல் போன்ற விளையாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

டயலொக் எக்‌ஷியடா நிறுவனத்தின் தலைவர் திரு ஹர்ஷ சமரநாயக அவர்கள் நிதி அனுசரனை காசோலையை இராணுவ பரா மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன அவர்களிடம் கையளித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் பிரேன்ட் சிரேஷ்ட பொது முகாமையாளர் பிரிகேடியர் ரோலன்ட் போஹொடவத்த, பரா மெய்வல்லுனர் சங்கத்தின் செயலாளர் பிரிகேடியர் ராஜா குணசேகர போன்றோர் இணைந்திருந்தனர். Running sports | FASHION NEWS