Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th October 2021 09:30:10 Hours

இராணுவத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு 52 வது படைப் பிரிவினர்களினால் சமூக நலன் திட்டம்

இராணுவத்தின் 72 வது ஆண்டு விழாவை முன்னிட்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில், 52 வது படைப்பிரிவு மற்றும் 522 வது பிரிகேட் படையினர் இணைந்து ஒக்டோபர் 10 - 11 ம் திகதிகளில் மிருசுவில் மற்றும் கெட்பெலி பகுதிகளில் சமூக நலன் திட்டங்களைத் தொடங்கினர்..

அதன்படி, 7 வது (தொண்) பட்டாலியன் கஜபா படையணியினர் மாணவர்களுக்கான எழுதுபொருட்களை வழங்கியதுடன் மிருசுவில் பகுதியில் அமைந்துள்ள புனித குடும்ப சிறுவர் இல்லத்திலுள்ள சிறுவர்களுக்கு பரிசுப் பொதிகளை வழங்கினர் மற்றும் அச்சிறுவர் இல்லத்திலுள்ள அனைவருக்குமான ஒரு சுவையான மதிய உணவு விருந்தினையும் ஏற்பாடுசெய்தனர்.

அதேவேளை , 7 வது (தொண்) பட்டாலியன் கஜபா படையணியின் படையினர் கெட்பெலி பகுதியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கினர்.

இந்த திட்டத்தில் கெட்பெலி பகுதியில் மொத்தம் 25 தகுதியான குடும்பங்களுக்கு ரூ. 1500 மதிப்புள்ள உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. இப் பொதிகளில் அரிசி, பருப்பு, சீனி , உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இருந்தன இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினரான 522 வது பிரிகேட் தளபதி கேணல் எஸ்.ஏ. ஹெட்டிகே அவர்கள் 7 வது (தொண்) கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் பல சிரஸ்ட அதிகாரிகளும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கலந்து கொண்டனர்.