Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th November 2017 08:21:37 Hours

இராணுவத்தினரால் நன்கொடை நிகழ்ச்சி திட்டங்கள்

திருகோணமலையில் உள்ள ரிவாதா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் நன்கொடை நிகழ்வு 22 ஆவது படைப்பிரிவின் படையினரால் ஒழுங்கு செய்யப்பட்டன.

ரிவாதா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் உள்ள சிறுவர்களுக்கு 60,000ரூபாய் பெறுமதிமிக்க பாடசாலை உபகரணங்கள்,விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நுளம்பு வலைகள் உள்ளடக்கப்பட்ட பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

ரிவாதா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் பராமரிப்பு அம்மையார் முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைய 22 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவினால் இந்த நன்கொடை நிகழ்ச்சி திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக 22 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Best Nike Sneakers | adidas Yeezy Boost 350